பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று காரணமாக பொள்ளாச்சி தாலுக்காவில் ஆன்லைன் மூலம் ஜமாபந்தி நடைபெற்றது. இரண்டு நாட்களில் 44 மனுக்கள் பெறப்பட்டதாக வருவாய்த்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று காரணமாக பொள்ளாச்சி தாலுக்காவில் ஆன்லைன் மூலம் ஜமாபந்தி நடைபெற்றது. இரண்டு நாட்களில் 44 மனுக்கள் பெறப்பட்டதாக வருவாய்த்துறை தகவல் தெரிவித்துள்ளது.
வருவாய்த் துறை சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்கள் குறைகளைத் தீர்க்க ஜமாபந்தி எனப்படும் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். பொள்ளாச்சியில் இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த முறை நேரடியாக மனுக்கள் பெறும் நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. மாறாக இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைன் வாயிலாக கோரிக்கை மனுக்கள் வருவாய்த்துறை சார்பில் பெறப்பட்டு வருகின்றன.
இதுதவிர, பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டிகள் மூலமும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி சார் ஆட்சியர் பொறுப்பு மகாராஜ் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், இரண்டு தினங்களில் முதியோர் உதவித்தொகை, விதவை சான்றிதழ், பட்டா மாறுதல் உள்ளிட்ட 44 மனுக்கள் பெறப்பட்டதாகவும், இந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருவாய்த் துறை சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்கள் குறைகளைத் தீர்க்க ஜமாபந்தி எனப்படும் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். பொள்ளாச்சியில் இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த முறை நேரடியாக மனுக்கள் பெறும் நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. மாறாக இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைன் வாயிலாக கோரிக்கை மனுக்கள் வருவாய்த்துறை சார்பில் பெறப்பட்டு வருகின்றன.
இதுதவிர, பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டிகள் மூலமும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி சார் ஆட்சியர் பொறுப்பு மகாராஜ் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், இரண்டு தினங்களில் முதியோர் உதவித்தொகை, விதவை சான்றிதழ், பட்டா மாறுதல் உள்ளிட்ட 44 மனுக்கள் பெறப்பட்டதாகவும், இந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.