ஆனைமலை நெல்லுகுத்திபாறை அருகே குடியிருப்பு பகுதியில் கழிவுகள் கொட்டுவதால் பொதுமக்கள் அவதி..!

கோவை: ஆனைமலை நெல்லுகுத்திபாறை அருகே குடியிருப்பு பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுகளை அப்புறப்படுத்தி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவதியுறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: ஆனைமலை நெல்லுகுத்திபாறை அருகே குடியிருப்பு பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுகளை அப்புறப்படுத்தி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவதியுறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைமலை நெல்லு குத்தி பாறை அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் வீதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.



இந்தநிலையில், கிருஷ்ணன் கோயில் வீதி மற்றும் ஆனைமலை-சேத்துமடை பிரதான சாலை சந்திப்பு பகுதியில், காய்கறி, இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுகளை அப்புறப்படுத்தி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதனால் அவதியுறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...