வால்பாறை மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் படகு இல்லத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்!

கோவை: வால்பாறை மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி சார்பில் படகு இல்லத்தை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.


கோவை: வால்பாறை மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி சார்பில் படகு இல்லத்தை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சார்பில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுத்தோட்டத்தில் இருந்து உற்பத்தியாகும் ஆறு காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா வழியாக நடுமலை ஆற்றில் கலக்கிறது.

குறிப்பாக, வால்பாறையை சுற்றியுள்ள காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா மற்றும் வால்பாறை நகரில் சேகரமாகும் கழிவு நீர் அனைத்தும் இந்த ஆறு வழியாக வந்து சேருகிறது.



இதனிடையே, ஸ்டான் மோர் சாலையில் நடுமலை ஆற்றில் கலக்கும் இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டு படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து கழிவுகளும் இந்த படகு இல்லத்தில் வந்து சேர்கின்றது. கழிவு நீரும், குப்பைகளும் சேர்ந்து இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

ஆகவே, இவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். மேலும் கழிவுநீர் குப்பைகள் சிறுவர் பூங்கா வரை தேங்கி நின்றன. எனவே, படகு இல்லத்தில் உள்ள கழிவுநீரை அகற்றி சுத்தப்படுத்த பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கழிவு நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...