கோவை: வால்பாறை மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி சார்பில் படகு இல்லத்தை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: வால்பாறை மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி சார்பில் படகு இல்லத்தை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சார்பில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுத்தோட்டத்தில் இருந்து உற்பத்தியாகும் ஆறு காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா வழியாக நடுமலை ஆற்றில் கலக்கிறது.
குறிப்பாக, வால்பாறையை சுற்றியுள்ள காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா மற்றும் வால்பாறை நகரில் சேகரமாகும் கழிவு நீர் அனைத்தும் இந்த ஆறு வழியாக வந்து சேருகிறது.

இதனிடையே, ஸ்டான் மோர் சாலையில் நடுமலை ஆற்றில் கலக்கும் இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டு படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து கழிவுகளும் இந்த படகு இல்லத்தில் வந்து சேர்கின்றது. கழிவு நீரும், குப்பைகளும் சேர்ந்து இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
ஆகவே, இவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். மேலும் கழிவுநீர் குப்பைகள் சிறுவர் பூங்கா வரை தேங்கி நின்றன. எனவே, படகு இல்லத்தில் உள்ள கழிவுநீரை அகற்றி சுத்தப்படுத்த பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கழிவு நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சார்பில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுத்தோட்டத்தில் இருந்து உற்பத்தியாகும் ஆறு காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா வழியாக நடுமலை ஆற்றில் கலக்கிறது.
குறிப்பாக, வால்பாறையை சுற்றியுள்ள காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா மற்றும் வால்பாறை நகரில் சேகரமாகும் கழிவு நீர் அனைத்தும் இந்த ஆறு வழியாக வந்து சேருகிறது.
இதனிடையே, ஸ்டான் மோர் சாலையில் நடுமலை ஆற்றில் கலக்கும் இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டு படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து கழிவுகளும் இந்த படகு இல்லத்தில் வந்து சேர்கின்றது. கழிவு நீரும், குப்பைகளும் சேர்ந்து இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
ஆகவே, இவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். மேலும் கழிவுநீர் குப்பைகள் சிறுவர் பூங்கா வரை தேங்கி நின்றன. எனவே, படகு இல்லத்தில் உள்ள கழிவுநீரை அகற்றி சுத்தப்படுத்த பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கழிவு நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.