வால்பாறை பகுதிக்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை!

கோவை: வால்பாறை பகுதிக்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: வால்பாறை பகுதிக்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தொற்று பரவலை தடுக்க சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறையினர் பல்வேறு துரித நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று வால்பாறையில் உள்ள டாடா குரூப், உட்பிரியார் குரூப், பிபிடிசி குரூப், வாட்டர் பால்ஸ் குரூப் உள்ளிட்ட பகுதிகளுக்கு தலா 168 டோஸ் தடுப்பூசிகளும், பாரி அக்ரோ மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய நிறுவனங்களுக்கு தலா 156 டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.

இதனிடையே, வால்பாறை டவுன் பகுதி மற்றும் பிறபகுதியில் உள்ள மக்களுக்காக வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி மையத்தில் மிகக்குறைந்த அளவே தடுப்பூசிகள் இருந்ததால், அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தும் தடுப்பூசிகள் முடிந்து போடமுடியாததால் பெரும் வேதனையுடன் திரும்பிச்சென்றனர்.



எனவே, பொதுமக்களின் நலன்கருதி வால்பாறைப்பகுதிக்குகூடுதலாக தடுப்பூசி வழங்க சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...