கோவை: சங்கரன்கோவிலில் விசாரணைக்குச் சென்ற காவல் அதிகாரி மீது போதை ஆசாமி சாக்கடை கழிவு நீரை அள்ளி வீசி, ஆபாசமாக வசைபாடிய சம்பவம் நடந்துள்ளது.
கோவை: சங்கரன்கோவிலில் விசாரணைக்குச் சென்ற காவல் அதிகாரி மீது போதை ஆசாமி சாக்கடை கழிவு நீரை அள்ளி வீசி, ஆபாசமாக வசைபாடிய சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் கள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் மது அருந்திவிட்டு அங்குள்ள குடியிருப்புவாசிகளுடன் தகராறு செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய காவல் அதிகாரியான பாலகிருஷ்ணன் விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். இதன்போது மதுபோதையில் இருந்த அசோகன், காவல் அதிகாரியை ஆபாசமாகத் திட்டி தீர்த்துள்ளான்.
மேலும், அவனை காவல்துறை அதிகாரி ஆபாசமாக பேசாதே என்று எச்சரிக்கை செய்யவே, பதிலுக்கு அவன் சாக்கடையை அள்ளி வீசி அசிங்கப்படுத்தி இருக்கிறான். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதனை வேடிக்கை பார்த்த நிலையில், போதை தலைக்கேறிய கொடூரன் காவல் அதிகாரியை ஆபாசமாக பேசி தகராறு செய்து, அவரது வாகனத்தின் தலைக்கவசத்தை தூக்கி எறிந்துள்ளான்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல் ஆன நிலையில், அசோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள அசோகனைத் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் கள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் மது அருந்திவிட்டு அங்குள்ள குடியிருப்புவாசிகளுடன் தகராறு செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய காவல் அதிகாரியான பாலகிருஷ்ணன் விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். இதன்போது மதுபோதையில் இருந்த அசோகன், காவல் அதிகாரியை ஆபாசமாகத் திட்டி தீர்த்துள்ளான்.
மேலும், அவனை காவல்துறை அதிகாரி ஆபாசமாக பேசாதே என்று எச்சரிக்கை செய்யவே, பதிலுக்கு அவன் சாக்கடையை அள்ளி வீசி அசிங்கப்படுத்தி இருக்கிறான். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதனை வேடிக்கை பார்த்த நிலையில், போதை தலைக்கேறிய கொடூரன் காவல் அதிகாரியை ஆபாசமாக பேசி தகராறு செய்து, அவரது வாகனத்தின் தலைக்கவசத்தை தூக்கி எறிந்துள்ளான்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல் ஆன நிலையில், அசோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள அசோகனைத் தேடி வருகின்றனர்.