சங்கரன்கோவிலில் விசாரணைக்குச் சென்ற போலீஸ் அதிகாரியை தாக்கிய ரவுடி... போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்

கோவை: சங்கரன்கோவிலில் விசாரணைக்குச் சென்ற காவல் அதிகாரி மீது போதை ஆசாமி சாக்கடை கழிவு நீரை அள்ளி வீசி, ஆபாசமாக வசைபாடிய சம்பவம் நடந்துள்ளது.


கோவை: சங்கரன்கோவிலில் விசாரணைக்குச் சென்ற காவல் அதிகாரி மீது போதை ஆசாமி சாக்கடை கழிவு நீரை அள்ளி வீசி, ஆபாசமாக வசைபாடிய சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் கள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் மது அருந்திவிட்டு அங்குள்ள குடியிருப்புவாசிகளுடன் தகராறு செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய காவல் அதிகாரியான பாலகிருஷ்ணன் விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். இதன்போது மதுபோதையில் இருந்த அசோகன், காவல் அதிகாரியை ஆபாசமாகத் திட்டி தீர்த்துள்ளான்.

மேலும், அவனை காவல்துறை அதிகாரி ஆபாசமாக பேசாதே என்று எச்சரிக்கை செய்யவே, பதிலுக்கு அவன் சாக்கடையை அள்ளி வீசி அசிங்கப்படுத்தி இருக்கிறான். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதனை வேடிக்கை பார்த்த நிலையில், போதை தலைக்கேறிய கொடூரன் காவல் அதிகாரியை ஆபாசமாக பேசி தகராறு செய்து, அவரது வாகனத்தின் தலைக்கவசத்தை தூக்கி எறிந்துள்ளான்.

இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல் ஆன நிலையில், அசோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள அசோகனைத் தேடி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...