திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முடி திருத்தகங்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முடி திருத்தகங்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் முடி திருத்தங்கள் அடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்னும் முடிதிருத்தகங்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்காத சூழ்நிலையில், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடைகளை நடத்த தயாராக இருப்பதாகவும் குறைந்தபட்ச நேரமாவது கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் தற்போது உள்ள விலைவாசியை கருத்தில் கொண்டு முடிதிருத்தும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா 15 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் முடி திருத்தங்கள் அடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்னும் முடிதிருத்தகங்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்காத சூழ்நிலையில், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடைகளை நடத்த தயாராக இருப்பதாகவும் குறைந்தபட்ச நேரமாவது கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் தற்போது உள்ள விலைவாசியை கருத்தில் கொண்டு முடிதிருத்தும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா 15 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.