பொள்ளாச்சி - போத்தனூர் அகல ரயில்வே பாதை பணிகள் குறித்து தென்னக ரயில்வேத் துறை பொது மேலாளர் ஆய்வு

பொள்ளாச்சி - போத்தனூர் அகல ரயில்வே பணிகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஸ்ட்ட ஜோகிரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி மற்றும் போத்தனூர் ரயில்வே பாதை அகல பாதையாக மாற்றும் பணி கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி - திண்டுக்கல், பொள்ளாச்சி - பாலக்காடு இடையேயான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மேலும், 2010-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் பொள்ளாச்சி- போத்தனூர் இடையேயான ரயில்வே பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து கூடுதலாக ரூ.100 கோடியினை மத்திய அரசு ஒதுக்கியது. இதையடுத்து தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 



இந்நிலையில், பொள்ளாச்சி போத்தனூர் இடையேயான அகல ரயில் பாதையில் தென்னக ரயில்வே மேலாளர் வசிஸ்ட்ட ஜோகிரி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''பொள்ளாச்சி- போத்தனூர் இடையிலான ரயில்வேப் பாதைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும். ஜனவரி இறுதிக்குள் பணிகள் முடிவடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.



Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...