கோவையில் கொரோனா குறைந்தாலும் உடனடியாக சிகிச்சை மையங்கள் மூடப்படாது - மாவட்ட அதிகாரி தகவல்!

கோவை: கோவையில் கொரோனா குறைந்தாலும் உடனடியாக சிகிச்சை மையங்கள் மூடப்படாது என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் கொரோனா குறைந்தாலும் உடனடியாக சிகிச்சை மையங்கள் மூடப்படாது என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இதனால் சிகிச்சை மையங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக காலி படுக்கைகள் உள்ளன.

மேலும், மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4,597 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் 2,630 படுக்கைகள் காலியாக உள்ளன. 2,808 சாதாரண படுக்கைகளில் 2,188 படுக்கைகளும், 852 அவசர சிகிச்சை படுக்கைகளில் 350 படுக்கைகளும் காலியாக உள்ளன.

இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 5,228 படுக்கைகள் உள்ளன. இதில், தற்போது 1,160 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4,068 படுக்கைகள் காலியாக உள்ளன.

இது குறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவதால் கொரோனா சிகிச்சை மையங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக காலி படுக்கைகள் உள்ளன. இருப்பினும் கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் எதுவும் மூடப்படாது. மருத்துவ கட்டமைப்புகள் அப்படியே இருக்கும். மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...