சாலை சுத்தம் செய்யும் வாகனத்தை மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகில் கோவை மாநகராட்சியும் ரூட்ஸ் நிறுவனமும் இணைந்து சாலை சுத்தம் செய்யும் வாகனத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் இன்று (30.11.2016) கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். 



சாலை சுத்தம் செய்யும் வாகனம் சி.எஸ்.ஆர். புராஜக்ட் மூலம் “கிளீன் கோயமுத்தூர்” சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டது. இந்த சாலை சுத்தம் செய்யும் இயந்திரமானது மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் தினந்தோறும் சாலை தடுப்புகளின் ஓரங்களில் உள்ள மண், கல் போன்ற இடர்பாடுகளையும், சாலையின் ஒரு புறங்களிலும் சேருகின்ற குப்பைகளை அகற்றி, சுகாதாரத்தை பேணி காப்பதற்கு ஏதுவான பணிகளை மேற்கொள்ளும். குறுகிய காலத்திற்குள் நீண்ட சாலை தூரத்தினை சுத்தம் செய்யும், மிகுந்த செயல்திறனும் நவீன தொழில்நுட்பங்களும் கொண்ட இயந்திரமாகும். 



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், ரூட்ஸ் குழும நிறுவனத் தலைவர் ராமசாமி, ரூட்ஸ் மல்டிகிளீன் நிறுவன நிர்வாக இயக்குநர் வருண் கார்த்திகேயன், ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிஞர் கவிதாசன், தலைமை நிதி அதிகாரி ரவி, ரூட்ஸ் மல்டிகிளீன் நிறுவன செயல் இயக்குநர் சந்திரசேகர், ரூட்ஸ் இண்டஸ்டிரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவன செயல் இயக்குநர் சரவணசுந்தரம் உதவி ஆணையர், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...