கோவை: வால்பாறை பகுதியில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மருத்துவர்கள் ஆதிவாசி பழங்குடி மக்கள் கிராமங்களில் சிறப்பு முகாம் அமைத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
கோவை: வால்பாறை பகுதியில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மருத்துவர்கள் ஆதிவாசி பழங்குடி மக்கள் கிராமங்களில் சிறப்பு முகாம் அமைத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை மலைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 2500 பேர்களுக்கு மேல் வனப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது கொரோனா பெருந்தொற்று அனைத்துப் பகுதிகளிலும் பரவி வருகிறது. அதைப்போல் வனப் பகுதிக்குள் வாழும் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கும் இந்தக் கொரோனா பெருந்தொற்றுப் பரவி இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய வால்பாறையில் உள்ள சுகாதார துறை மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் மருத்துவக் குழு சிறப்பு முகாம் மூலம் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


நெடுகுன்று செட்டில் மெண்டு பகுதியில் 24 குடும்பங்கள் உள்ளன. அங்கு, 30-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள் வனப் பகுதியை விட்டு வெளியே வருவது இல்லை. அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற பரிசோதனை செய்து யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர் சுகாதாரத் துறையினர். இதுபோன்று ஆதிவாசி பழங்குடி கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்வதால், கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை மலைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 2500 பேர்களுக்கு மேல் வனப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது கொரோனா பெருந்தொற்று அனைத்துப் பகுதிகளிலும் பரவி வருகிறது. அதைப்போல் வனப் பகுதிக்குள் வாழும் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கும் இந்தக் கொரோனா பெருந்தொற்றுப் பரவி இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய வால்பாறையில் உள்ள சுகாதார துறை மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் மருத்துவக் குழு சிறப்பு முகாம் மூலம் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நெடுகுன்று செட்டில் மெண்டு பகுதியில் 24 குடும்பங்கள் உள்ளன. அங்கு, 30-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள் வனப் பகுதியை விட்டு வெளியே வருவது இல்லை. அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற பரிசோதனை செய்து யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர் சுகாதாரத் துறையினர். இதுபோன்று ஆதிவாசி பழங்குடி கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்வதால், கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.