500, 1000 ரூபாய் தடையை எதிர்த்து கோவையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்ததைக் கண்டித்து கோவையில் பல்வேறு எதிர்க்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைக் கண்டித்து, திங்களன்று (இன்று) நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், புதிய 500 ரூபாய் தாள்கள் அதிகளவில் புழக்கத்திற்கு வராததால் சில்லறை பிரச்சனை நீடிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 





இதேப்போல, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 





இதனிடையே, ரூபாய் தாள்கள் பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்து, கேரள மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் கோவையில் இருந்து அம்மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...