பள்ளி அருகே சிகரெட்டுகள் விற்பனை செய்த இருவர் கைது


பள்ளி மற்றும் கல்லுரிகள் இருக்கும் பகுதிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு போதை பொருட்களை விற்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே சிகரெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது பள்ளி அருகே இருந்த இரு பெட்டி கடைகளில் சிகரெட்டுகள் விற்பனை  செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கடைக்காரர்களான  சரவணன் மற்றும் பூவேல் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...