இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணா அவர்களுக்கு கோவையில் பாராட்டு விழா!

கோவை: ஆர்.எஸ் புரம் பாரதீய வித்யாபவன் பள்ளி கலையரங்கில் இன்று மாலை 6 மணியளவில் கர்நாடக இசையில் மகசேசே விருது பெற்ற இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர்(சிஐஐ) மற்றும் அத்வைத் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவி சாம் வரவேற்புரை வழங்கினார்.



நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கலந்து கொண்டார். 

பின்னர், அவர் பேசுகையில், 'டி. எம் கிருஷ்ணா இசைக்கலைஞர் குடும்பத்திலிருந்து சிறு வயது முதலே கர்நாடக இசை ஞானம் பெற்ற கலைஞர். புகழ்பெற்ற மறைந்த செம்மங்குடி ஸ்ரீ நிவாச அய்யரிடம் ஏழு வருடங்களுக்கு மேல் சிறப்பு பயிற்சி பெற்றவர். 



இவருடைய முதல் சங்கீத நிகழ்ச்சி 12 வயதிலே தொடக்கி பல உயரங்களை கடந்து இன்று சிகரம் தொட்டது. இன்று இவருடைய இந்த மகசேசே விருது அவருடைய இசைக்கலைஞர் மாகுடத்தை உலகரியச் செய்தது' எனக் கூறினார்.

பின்னர், இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணனுக்கு, மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி பாராட்டி விருதினை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியினை, தென்னிந்திய கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளை, பாரதீய வித்யாபவன், ராஜலட்சுமி கலை நிறுவனம், மனோரஞ்சிதம் (அய்யப்பன் பூஜா சங்கம்), கோவை இசை சங்கம் மற்றும் அவியாசம் முதலிய நிறுவனங்கள் இணைத்து வழங்கின.

இதில், கர்நாடக வயலின் இசைக்கலைஞர் வித்வான் ஸ்ரீ ராம்குமார், இசைக்கலைஞர்கள் சுகுமார், நாகசுந்தரம், சிவகிருஷ்ணன், சந்திரசேகர் பகவதி, சிவராம குமார் மற்றும் பொது மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

⁠⁠⁠⁠

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...