கோவை: கொரோனா நோய் தொற்று பரவல் இரண்டாவது அலை தமிழகத்தில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.
கோவை: கொரோனா நோய் தொற்று பரவல் இரண்டாவது அலை தமிழகத்தில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.

நேற்று கோவையில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதலமைச்சரிடம், இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) சார்பில் அதன் கன்வீனர், பிரபு தாமோதரன், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

அதேபோல், கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நல சங்கம் ('COSIEMA) சார்பில், தலைவர், நல்லதம்பி மற்றும் முன்னாள் தலைவர் சுருளிவேல் ஆகியோர், 12 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் (OSMA) சங்கம் சார்பில், நிர்வாகிகள் அருள்மொழி, ஜெயபால் மற்றும் ராம்பிரசாத் உள்ளிட்டோர் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர்.
மேலும், ஸ்ரீ அன்னபூர்ணா குழுமம் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், செயல் இயக்குனர், ஜெகன் எஸ். தாமோதரசாமி ஆகியோர் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினர்.
நேற்று கோவையில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதலமைச்சரிடம், இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) சார்பில் அதன் கன்வீனர், பிரபு தாமோதரன், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
அதேபோல், கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நல சங்கம் ('COSIEMA) சார்பில், தலைவர், நல்லதம்பி மற்றும் முன்னாள் தலைவர் சுருளிவேல் ஆகியோர், 12 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் (OSMA) சங்கம் சார்பில், நிர்வாகிகள் அருள்மொழி, ஜெயபால் மற்றும் ராம்பிரசாத் உள்ளிட்டோர் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர்.
மேலும், ஸ்ரீ அன்னபூர்ணா குழுமம் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், செயல் இயக்குனர், ஜெகன் எஸ். தாமோதரசாமி ஆகியோர் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினர்.