கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளுக்கும் விரைவில் ஆக்சிஜன் வசதி... மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு..!

கோவை: கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் 830 படுக்கைகள் உள்ள நிலையில், அதனை 1030 படுக்கைகளாக உயர்த்தி அனைத்து படுக்கைகளுக்கும் விரைவில் ஆக்சிஜன் வசதி அளிக்கப்படும் என இ.எஸ்.ஐ மருத்துவமனையின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் 830 படுக்கைகள் உள்ள நிலையில், அதனை 1030 படுக்கைகளாக உயர்த்தி அனைத்து படுக்கைகளுக்கும் விரைவில் ஆக்சிஜன் வசதி அளிக்கப்படும் என இ.எஸ்.ஐ மருத்துவமனையின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நாள் ஒன்றுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேசமயம், இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவையில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையிலேயே உள்ளன. இந்தநிலையில், புதிதாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாமதமாவதால், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து இ.எஸ்.ஐ மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் கூறுகையில், ‘‘இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் உள்ள 11 கே.எல் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்கில் இருந்து 88 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் நோயாளிகளுக்கு தங்கு தடையில்லாமல் வழங்கப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜன் சப்ளை செய்யும் கருவிகள் உட்பட பல்வேறு கொள்ளளவுகளில் 180 ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. 830 படுக்கை வசதிகள் உள்ள நிலையில் 407 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்'' தெரிவித்தார்.

மேலும், '830 படுக்கைகள் ஏற்கெனவே உள்ள நிலையில், 200 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு, 1030 படுக்கை வசதிகளாக விரைவில் தரம் உயர்த்தப்பட உள்ளது' எனவும், இந்த வார இறுதிக்குள் ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு, அனைத்துப் படுக்கைகளும் ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்றப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். 'இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் செயல்பாட்டுக்கு வரும்' என இ.எஸ்.ஐ நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...