சிறுவாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் 15.48 அடியாக உயர்வு!

கோவை: சிறுவாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணத்தால் அணையின் நீர்மட்டம் 15.48 அடியாக உயர்ந்துள்ளது.


கோவை: சிறுவாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணத்தால் அணையின் நீர்மட்டம் 15.48 அடியாக உயர்ந்துள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. கோவை மக்களின் முக்கிய நீர் ஆதரமாக சிறுவாணி நீர் கருதப்படுகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நூற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.

சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டது.

கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் துவங்கியதில் இருந்தே அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது. அணையின் நீர்மட்டம் 15 அடிக்கு கீழே சரிந்தது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாநகராட்சி சார்பாக சிறுவாணியில் இருந்து 75.33 எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. 15 அடிக்கும் கீழே சென்ற நிலையில் அணையின் நீர்மட்டம் தற்போது 15.48 அடியாக உள்ளது' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...