கோவை மாநகரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மூலமாக பெருநாள் கொண்டாட்டம்..!

கோவை: கோவை மாநகரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மூலமாக பெருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏழை எளியவர்களுக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய ரமலான் கிஃட் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மூலமாக பெருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏழை எளியவர்களுக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய ரமலான் கிஃட் வழங்கப்பட்டது.

இஸ்லாமிய சமுதாயத்தினர் கடந்த ஒரு மாதமாக நோன்பு இருந்து அதிகமாக வழிபாடுகள் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து, நேற்று ஈகைத் திருநாள் ஈதுல் பிஃத்ர் எனும் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடினர்.

கொரோனா பெருந்தொற்று பரவலாக பாதித்து வரும் இந்த காலகட்டத்திலும் தங்களது வழிபாடுகளை கூட்டமாக அல்லாமல் தனித்தனியே வீடுகளில் குடும்பத்துடன் இணைந்து சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டு இவ்வுலகம் மற்றும் மறுஉலக வெற்றிக்காக பிரார்த்தனை புரிந்தனர்.

உலக அமைதிக்கும் கொரொனா பெருந்தொற்றுப் பாதுகாப்புக்காகவும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து, கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் செயலாளரான அப்துல் ஹக்கீம்,

செயலாளர், ‘‘கோவை மாநகரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மூலமாக பெருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏழை எளியவர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய ரமலான் கிஃட் சுமார் ஆயிரத்தி 400 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பெருநாள் தொழுகைக்கு முன்பாக பிஃத்ர் ஜக்காத் எனும் ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் பிரியாணி அரிசி சுமார் 7500 கிலோ சுமார் 3750 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. சுமார் 3000 கிலோ காய்கறிகள் வழங்கப்பட்டன.

இதன் மூலம் ரம்ஜான் பெருநாள் அன்று யாரும் பசியோடு இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த நாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலு, கோவை நகரத்தின் பல பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டன.

நோய்த்தொற்று காரணமாக சகோதர சமுதாய மக்களுக்கு வழக்கமாக வழங்கிவரும் பிரியாணி உணவு இம்முறை வழங்கப்படவில்லை. இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய தியாகத்திருநாள் ஹஜ்ஜூப் பெருநாள் அன்று அனைவருக்கும் பிரியாணி உணவும் இனிப்புகளும் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...