கோவை: பொள்ளாச்சி அருகே ஊரடங்கு கட்டுபாடுகளை மீறி 12 மணிக்கு மேல் உடுமலை ரோட்டில் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்து அனுப்பினர்.
கோவை: பொள்ளாச்சி அருகே ஊரடங்கு கட்டுபாடுகளை மீறி 12 மணிக்கு மேல் உடுமலை ரோட்டில் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்து அனுப்பினர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மதியம் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் உள்ளிட போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து உடுமலை சாலையில் ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி நோய்க் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிப்பேன் என்று உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

மேலும், ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே நடமாடினால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மதியம் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் உள்ளிட போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து உடுமலை சாலையில் ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி நோய்க் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிப்பேன் என்று உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
மேலும், ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே நடமாடினால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.