கோவை: கோவை மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி சார்பில் பல்வேறு கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கோவை: கோவை மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி சார்பில் பல்வேறு கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, தமிழக அரசின் உத்தரவுபடி சமூக இடைவெளி, கட்டாயம் முகக் கவசம் அணிதல், 50% ஊழியர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காத தொழிற்சாலை மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வருவாய் துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வருவாய் துறையின் சார்பில் நாள்தோறும் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வடபுதூர், சொலவம்பாளையம், அரசம்பாளையம் ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டபோது, சில தொழிற்சாலைகளில் மற்றும் கடைகளில் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களில் மூன்று தொழிற்சாலை மற்றும் பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றாமல் இருக்கும் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, தமிழக அரசின் உத்தரவுபடி சமூக இடைவெளி, கட்டாயம் முகக் கவசம் அணிதல், 50% ஊழியர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காத தொழிற்சாலை மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வருவாய் துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வருவாய் துறையின் சார்பில் நாள்தோறும் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வடபுதூர், சொலவம்பாளையம், அரசம்பாளையம் ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டபோது, சில தொழிற்சாலைகளில் மற்றும் கடைகளில் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களில் மூன்று தொழிற்சாலை மற்றும் பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றாமல் இருக்கும் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.