வால்பாறை: வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தேயிலைத் தோட்ட நிர்வாகிகளுடன் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வால்பாறை: வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தேயிலைத் தோட்ட நிர்வாகிகளுடன் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு சுமார் ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக வால்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முகாம்கள் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த் துறையும் காவல் துறையும் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜா தலைமையில், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உட்பிரையர்.டாடா.பாரி, அக்ரோ.பி.பிடிசி.பிகேடி.. வாட்டர் பால்.ஜெயஸ்ரீ ஆகிய தேயிலைத் தோட்ட நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் கோழிக்கடை கணேசன் ஈகா பொன்னுசாமி டென்சிங் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தொழிலாளர்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் கண்டிப்பாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும், தொழிற்சங்கம் சார்பில் மாலை 4 மணிக்கு பதில் மூன்று மணிக்கு பணியைக் கைவிட விடப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு சுமார் ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக வால்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முகாம்கள் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த் துறையும் காவல் துறையும் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜா தலைமையில், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உட்பிரையர்.டாடா.பாரி, அக்ரோ.பி.பிடிசி.பிகேடி.. வாட்டர் பால்.ஜெயஸ்ரீ ஆகிய தேயிலைத் தோட்ட நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் கோழிக்கடை கணேசன் ஈகா பொன்னுசாமி டென்சிங் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தொழிலாளர்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் கண்டிப்பாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும், தொழிற்சங்கம் சார்பில் மாலை 4 மணிக்கு பதில் மூன்று மணிக்கு பணியைக் கைவிட விடப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.