கோவை: கொரோனா தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்து திமுக அமைச்சர்கள் நாளை காலை 11 மணிக்கு கோவையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கோவை: கொரோனா தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்து திமுக அமைச்சர்கள் நாளை காலை 11 மணிக்கு கோவையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணிக்கான பொறுப்பாளர்களாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நியமிக்கப்பட்டுள்ள இவர்கள் கோவையில் நாளை காலை 11 மணிக்கு ஆவாரம் பாளையத்தில் உள்ள கோ இந்தியா வளாகத்தில் தொழில் துறையினரிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில் துறையினரின் பங்களிப்பு மற்றும் தொழில் துறையினர் சார்பில் அரசிடமிருந்து தேவைப்படும் கோரிக்கைகள் முன்வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் அமைச்சர்கள் நாளை மேற்கொள்ளும் கள ஆய்வு கோவை மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.