கோவை: தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை தர வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை: தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை தர வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நாகராஜனிடம் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜேம்ஸ் கூறியதாவது:
“தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், நடப்பு கணக்கு வைத்துள்ள குறுந்தொழில்கள் அனைத்திற்கும் கடன் உதவி செய்ய வேண்டும். எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு, குறு சிறு தொழில்களுக்கு வட்டி தள்ளுபடியும், தவணை ஒத்தி வைப்பு அளிக்க வேண்டும். குறு, சிறு தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.
கொரோனா தவிர மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற சிறிய மருத்துவமனைகளை அரசு அடையாளப்படுத்தி அறிவிக்க வேண்டும். ஓராண்டு காலத்திற்கு குறு,சிறு தொழில்களின் மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது தமிழக அரசு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சில தொழிற்பிரிவுகள் இயங்க அனுமதித்து உள்ளது. இந்த தொழில் பிரிவினருக்கு தேவையான மூலப் பொருட்களை விநியோகம் செய்யும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் சில மணி நேரங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.” இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நாகராஜனிடம் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜேம்ஸ் கூறியதாவது:
“தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், நடப்பு கணக்கு வைத்துள்ள குறுந்தொழில்கள் அனைத்திற்கும் கடன் உதவி செய்ய வேண்டும். எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு, குறு சிறு தொழில்களுக்கு வட்டி தள்ளுபடியும், தவணை ஒத்தி வைப்பு அளிக்க வேண்டும். குறு, சிறு தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.
கொரோனா தவிர மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற சிறிய மருத்துவமனைகளை அரசு அடையாளப்படுத்தி அறிவிக்க வேண்டும். ஓராண்டு காலத்திற்கு குறு,சிறு தொழில்களின் மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது தமிழக அரசு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சில தொழிற்பிரிவுகள் இயங்க அனுமதித்து உள்ளது. இந்த தொழில் பிரிவினருக்கு தேவையான மூலப் பொருட்களை விநியோகம் செய்யும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் சில மணி நேரங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.” இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.