கோவையில் கொரோனாவுக்கு செய்தியாளர் பலி..!

கோவை: கோவையில் கொரோனாவுக்கு பாதிப்புக்குள்ளான செய்தியாளர் ஒருவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கொரோனாவுக்கு பாதிப்புக்குள்ளான செய்தியாளர் ஒருவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் பகுதியில் தினத்தந்தி குழுமம், மாலை நாளிதழ், மாலை மலர் போன்ற செய்தித்தாள்களில் பகுதிநேர செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் மணிகண்டன் வயது (47). இவருடைய தகப்பனார் நகைச்சுவை நடிகராக இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய தாயார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில்,

மணிகண்டன் அவருடைய தம்பி சந்தோஷ் உடன் தங்கி வந்துள்ளார்.

அவருடைய தம்பி சந்தோஷ் சூலூரில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுவிடுவதில் மணிகண்டனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் ஆக்ஜிசன் கூடிய பெட்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், நேற்று இரவில் இருந்து மணிகண்டன் உடைய தம்பி சந்தோஷ் அவர் செல்போனுக்கு தொடர்பு கொண்டிருந்திருக்கிறார். ஆனால், செல்போன் எடுக்கவில்லை.

அதனால், இது குறித்து இன்று அலுவலகத்தில் தகவல் கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள், இன்று அரசு மருத்துவனையில் சென்று கேட்டபோது நேற்று மாலை 6 மணி அளவில் மணிகண்டன் இறந்துவிட்டதாகவும் அங்குள்ள வார்டில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த செய்தி அந்தப் பகுதியில் உள்ள செய்தியாளர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவியது.

செய்தியாளர் மணிகண்டன் இறந்த செய்தி செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரிதாபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...