மாட்டுக்கொட்டகையாக மாறிய வால்பாறை புதிய பேருந்து நிலைய பாலம்..!

கோவை: கோவை வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது ஜுபிடர் பாலம். இந்தப் பாலத்தில் வளர்ப்பு மாடுகள் இரவில் ஏராளமாகத் தங்குகின்றன. இதனால், பாலம் நிரந்தர மாட்டுக்கொட்டகையாக மாறிவிட்டது.


கோவை: கோவை வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது ஜுபிடர் பாலம். இந்தப் பாலத்தில் வளர்ப்பு மாடுகள் இரவில் ஏராளமாகத் தங்குகின்றன. இதனால், பாலம் நிரந்தர மாட்டுக்கொட்டகையாக மாறிவிட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது ஜுபிடர் பாலம். இந்தப் பாலத்தின் வழியாக சிங்கோனா முடிஸ் உட்பட பல்வேறு தேயிலைத் தோட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள், மக்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில், இந்தப் பாலத்தில் வளர்ப்பு மாடுகள் இரவில் ஏராளமாக வந்து தங்குகின்றன. இதனால், இந்தப் பாலம் நிரந்தர மாட்டுக்கொட்டகையாக மாறிவிட்டது. மாடுகளின் கழிவுகள் பாலம் மட்டுமின்றி அந்தப் பகுதி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.





இதன் காரணமாக அந்தப் பாலத்தைக் கடந்து செல்பவர்கள் வாகனத்தில் சென்றாலும் நடந்து சென்றாலும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும், துர்நாற்றமும் வீசுகின்றது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தற்போதைய நிலைமையில், கொரோனா பெருந்தொற்று நோய் அதிகரித்து வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக நகராட்சி நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...