பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை விசாரித்ததில் அவர் கஞ்சா வியாபாரி என்பதை அறிந்து உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை விசாரித்ததில் அவர் கஞ்சா வியாபாரி என்பதை அறிந்து உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(48). இவர் சமத்தூர் அருகே இன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து பணியில் இருந்த கோட்டூர் உதவி ஆய்வாளர் செந்தில்வேல் பெருமாள் உள்ளிட்ட போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரிடம் சோதனை செய்தபோது, சுமார் 400 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(48). இவர் சமத்தூர் அருகே இன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து பணியில் இருந்த கோட்டூர் உதவி ஆய்வாளர் செந்தில்வேல் பெருமாள் உள்ளிட்ட போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரிடம் சோதனை செய்தபோது, சுமார் 400 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.