ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய கோவை ஆயுதப்படை காவலர்!

கோவை: கோவையை சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் தனது ஏப்ரல் மாத சம்பளத்தை கொரோனா தொற்றுத் தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் தனது ஏப்ரல் மாத சம்பளத்தை கொரோனா தொற்றுத் தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. கோவையிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நிவாரண நிதி அளிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் கோவை ஆயுதப்படையில் (2008 பேஜ்ஜை சேர்ந்தவர்) பணியாற்றும் பாபு என்ற காவலர் தனது ஏப்ரல் மாத சம்பளத் தொகையான ரூ.34,474 ஐ முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கி உள்ளார்.

இந்த தொகைக்கான வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாக செல்வரத்தினத்திடம் இன்று வழங்கினார். பாபுவிடம் இருந்து கொரோனா நிதிக்கான வரைவோலையை பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்.பி நாக செல்வரத்தினம் அவரை பாராட்டினார். பாபுவைப் போல கொரோனா நிவாரண நிதிக்காக மேலும் பலர் நிதி வழங்க முன்வர வேண்டும் எனவும் எஸ்.பி நாக செல்வரத்தினம் வேண்டுகோள் விடுத்தார். ஆயுதப்படை காவலர் பாபு கொரோனா தொற்றுத் தடுப்பு பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...