திருப்பூர் உடுமலை நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள்!

கோவை: உடுமலையில் 2002ம் ஆண்டு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் எவரேனும் இருந்தால் புகார் அளிக்கலாம் என பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


கோவை: உடுமலையில் 2002ம் ஆண்டு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் எவரேனும் இருந்தால் புகார் அளிக்கலாம் என பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் உடுமலையில் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி, அருணாச்சலம் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் பைனான்ஸ் ஆகிய நிதி நிறுவனங்கள் கடந்த 2002ம் ஆண்டு செயல்பட்டு வந்தன. அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு வட்டி, அசல் தொகை இரண்டையும் தராமல் மோசடி செய்தனர்.

இது தொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது 2002ம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்து வழக்கு முடிக்கப்பட்டது.

மேலும் இந்த நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து தற்போது வரை யாரேனும் புகார் கொடுக்காமல் இருந்தால் தகுந்த ஆவணங்களுடன் வரும் 14ம் தேதிக்குள் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை சந்தித்து புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...