கோவை: கோவை செல்வபுரம் குடியிருப்புக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டார்.
கோவை: கோவை செல்வபுரம் குடியிருப்புக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டார்.
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் பாபு. இவர் இன்று காலை செல்வபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்தப் பகுதியில் உள்ள சாஸ்தா நகரில் குடியிருப்பு வீடுகள் உள்ளன. அங்கு திடீரென பொதுமக்கள் பாம்பு, பாம்பு என கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு காவலர் பாபு உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே நல்ல பாம்பு இருப்பது தெரிய வந்தது.
அதை லாகவமாகக் கையாண்டு அந்தப் பாம்பை உயிருடன் பிடித்தார் காவலர் பாபு. பிறகு அதைக் கொண்டு சென்று காட்டுப்பகுதிக்குள் விட்டுவிட்டு வந்தார். இந்த நிகழ்வை நேரில் பார்த்த பொதுமக்கள் காவலருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் பாபு. இவர் இன்று காலை செல்வபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்தப் பகுதியில் உள்ள சாஸ்தா நகரில் குடியிருப்பு வீடுகள் உள்ளன. அங்கு திடீரென பொதுமக்கள் பாம்பு, பாம்பு என கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு காவலர் பாபு உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே நல்ல பாம்பு இருப்பது தெரிய வந்தது.
அதை லாகவமாகக் கையாண்டு அந்தப் பாம்பை உயிருடன் பிடித்தார் காவலர் பாபு. பிறகு அதைக் கொண்டு சென்று காட்டுப்பகுதிக்குள் விட்டுவிட்டு வந்தார். இந்த நிகழ்வை நேரில் பார்த்த பொதுமக்கள் காவலருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.