வால்பாறை: வால்பாறையில் கொரோனா முழு ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வால்பாறை: வால்பாறையில் கொரோனா முழு ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதி மற்றும் டவுன் பகுதிகளில் காலை முதல் மதியம் 12 மணி வரை மளிகை கடை இறைச்சிக்கடை போன்றவைகள் திறக்கப்படுகின்றன.

12 மணிக்கு மேலாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு பின்பற்றப்படுகின்றது.
வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் 30 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வால்பாறை அஞ்சலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம், காந்தி சிலை பேருந்து நிலையம் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 12 மணிக்கு மேல் வால்பாறை பகுதிக்கு வரும் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் எந்த ஒரு காரணமும் இன்றி சுற்றி திரிபவர்களின் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

வால்பாறை பகுதியில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சுமார் 41 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொது முடக்கம் காரணமாக 41 பேருந்துகளும் வால்பாறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து பேருந்துகளிலும் கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதி மற்றும் டவுன் பகுதிகளில் காலை முதல் மதியம் 12 மணி வரை மளிகை கடை இறைச்சிக்கடை போன்றவைகள் திறக்கப்படுகின்றன.
12 மணிக்கு மேலாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு பின்பற்றப்படுகின்றது.
வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் 30 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வால்பாறை அஞ்சலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம், காந்தி சிலை பேருந்து நிலையம் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 12 மணிக்கு மேல் வால்பாறை பகுதிக்கு வரும் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் எந்த ஒரு காரணமும் இன்றி சுற்றி திரிபவர்களின் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
வால்பாறை பகுதியில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சுமார் 41 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொது முடக்கம் காரணமாக 41 பேருந்துகளும் வால்பாறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து பேருந்துகளிலும் கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.