கோவை: கோவையில் உள்ள ஒரு வீட்டில் 150 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் உள்ள ஒரு வீட்டில் 150 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ஆத்துப்பாலம் அருகில் உள்ள குறிச்சி பிரிவு என்.பி. இட்டேரி பகுதியைச் சேர்ந்த அபு என்ற தாடி அபு என்ற இளைஞர் முழுஊரடங்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தனது வீட்டில் மறைத்து வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் என்.பி. இட்டேரியில் உள்ள ஜமாத்தாரிடம் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து ஜமாத்தாரும், பொதுமக்களும் திடீரென அபுவின் வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தியதில் 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை மறைத்துவைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஊர்பொதுமக்கள் அபுவைப் பிடித்து கோவை போத்தனூர் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் பறிமுதல் செய்த மதுபாட்டில்களைப் பெற்றுக்கொண்ட போலீஸார் அபுமீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தற்பொழுது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கோவை ஆத்துப்பாலம் அருகில் உள்ள குறிச்சி பிரிவு என்.பி. இட்டேரி பகுதியைச் சேர்ந்த அபு என்ற தாடி அபு என்ற இளைஞர் முழுஊரடங்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தனது வீட்டில் மறைத்து வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் என்.பி. இட்டேரியில் உள்ள ஜமாத்தாரிடம் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து ஜமாத்தாரும், பொதுமக்களும் திடீரென அபுவின் வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தியதில் 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை மறைத்துவைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஊர்பொதுமக்கள் அபுவைப் பிடித்து கோவை போத்தனூர் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் பறிமுதல் செய்த மதுபாட்டில்களைப் பெற்றுக்கொண்ட போலீஸார் அபுமீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தற்பொழுது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.