கோவை: லஞ்சப் புகார் எதிரொலியாக, கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் ஒப்பந்த ஊழியர்கள் இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கோவை: லஞ்சப் புகார் எதிரொலியாக, கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் ஒப்பந்த ஊழியர்கள் இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு, தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் பணிபுரியும் சில ஊழியர்கள், நோயாளிகளை வீல் சேர், ஸ்ட்ரெக்சர்களில் பிற வார்டுகளுக்கு அழைத்துச் செல்ல லஞ்சம் வாங்குவதாக, புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரசவ வார்டில் குழந்தை பிறப்பு, அறுவை சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளிடமும், வசூல் வேட்டை நடத்தப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் பிரசவ வார்டில் பெண் ஒப்பந்த ஊழியர்கள் இருவர், பிரசவம் ஆன பெண்ணின் உறவினரிடம் லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், பெண் ஒப்பந்த ஊழியர்கள், ராணி, 46, கண்ணம்மாள், 35 ஆகிய இருவரும் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் இருவரையும் நேற்று சஸ்பெண்ட் செய்தது. மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், 'மருத்துவமனையில் எந்த ஒரு சேவைக்கும், பொதுமக்கள் பணம் தரத்தேவையில்லை. அதையும் மீறி பணம் கேட்பவர்கள் குறித்த விவரத்தை நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். புகார் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றார்.
கோவை அரசு மருத்துவமனைக்கு, தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் பணிபுரியும் சில ஊழியர்கள், நோயாளிகளை வீல் சேர், ஸ்ட்ரெக்சர்களில் பிற வார்டுகளுக்கு அழைத்துச் செல்ல லஞ்சம் வாங்குவதாக, புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரசவ வார்டில் குழந்தை பிறப்பு, அறுவை சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளிடமும், வசூல் வேட்டை நடத்தப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் பிரசவ வார்டில் பெண் ஒப்பந்த ஊழியர்கள் இருவர், பிரசவம் ஆன பெண்ணின் உறவினரிடம் லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், பெண் ஒப்பந்த ஊழியர்கள், ராணி, 46, கண்ணம்மாள், 35 ஆகிய இருவரும் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் இருவரையும் நேற்று சஸ்பெண்ட் செய்தது. மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், 'மருத்துவமனையில் எந்த ஒரு சேவைக்கும், பொதுமக்கள் பணம் தரத்தேவையில்லை. அதையும் மீறி பணம் கேட்பவர்கள் குறித்த விவரத்தை நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். புகார் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றார்.