ஊரடங்கால் சுப நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகள்... பொள்ளாச்சி பூ வியாபாரிகள் கடும் பாதிப்பு..!

பொள்ளாச்சி: அதிகரித்துவரும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பூ வியாபாரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, நிவாரணம் வழங்க வேண்டி அரசுக்கு பொள்ளாச்சி பூ வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


பொள்ளாச்சி: அதிகரித்துவரும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பூ வியாபாரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, நிவாரணம் வழங்க வேண்டி அரசுக்கு பொள்ளாச்சி பூ வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நேற்று முதல் மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பொள்ளாச்சி பகுதியைப் பொறுத்தவரை இரண்டாவது நாளான இன்று அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கடைகளான மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் வெளியில் வராத நிலையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.



அதேபோல் நடைபாதை வியாபாரிகள் என பழ வியாபாரிகள், பூ வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் தங்களைப் போன்ற வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு கடன் சுமையில் உள்ள நிலையில், அதோடு தற்போது இரண்டு வருடங்கள் வியாபாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், தற்போது தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு அரசு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பொள்ளாச்சி நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...