கோவை: குறுந்தொழில்களுக்கு என தனி அமைச்சகம், ஆண்டுக்கு 100 தொழிற்பேட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக முதல்வருக்கு கோவை கம்ப்ரசர் மற்றும் ரயில்வே சப்ளையர்ஸ் தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: குறுந்தொழில்களுக்கு என தனி அமைச்சகம், ஆண்டுக்கு 100 தொழிற்பேட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக முதல்வருக்கு கோவை கம்ப்ரசர் மற்றும் ரயில்வே சப்ளையர்ஸ் தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை கம்ப்ரசர் தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் மு.ரவீந்திரன் மற்றும் ரயில்வே சப்ளையர்ஸ் சங்கத்தின் தலைவர் சுருளிவேல் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தமிழக மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் அறிவித்து வரும் பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த சிறு குறு தொழில்கள் எண்ணிக்கையில், எட்டு சதவிகிதம் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 97 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தங்கள் அரசில் ஊரக தொழில்களுக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாநில உற்பத்தியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றும் நகர்ப்புற குறுந்தொழில்களுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். இந்த அமைச்சகம் மூலமாக ஆண்டுக்கு 100 புதிய தொழிற்பேட்டைகள் நிறுவ வேண்டும். உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்துவதற்கு வசதியாக உழவர் சந்தை போல ‘தொழிற்சந்தைகள்' முக்கிய நகரங்களில் நிறுவ வேண்டும். அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கோவையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் குறுந்தொழில் பிரிவை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சர்வதேச அளவுக்கு தொழில்நுட்பத்தை உயர்த்திக் கொள்ளவும், உற்பத்தி அளவை பெருக்கிக் கொள்ளவும் முடியும்.'' என்று கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
கோவை கம்ப்ரசர் தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் மு.ரவீந்திரன் மற்றும் ரயில்வே சப்ளையர்ஸ் சங்கத்தின் தலைவர் சுருளிவேல் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தமிழக மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் அறிவித்து வரும் பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த சிறு குறு தொழில்கள் எண்ணிக்கையில், எட்டு சதவிகிதம் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 97 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தங்கள் அரசில் ஊரக தொழில்களுக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாநில உற்பத்தியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றும் நகர்ப்புற குறுந்தொழில்களுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். இந்த அமைச்சகம் மூலமாக ஆண்டுக்கு 100 புதிய தொழிற்பேட்டைகள் நிறுவ வேண்டும். உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்துவதற்கு வசதியாக உழவர் சந்தை போல ‘தொழிற்சந்தைகள்' முக்கிய நகரங்களில் நிறுவ வேண்டும். அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கோவையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் குறுந்தொழில் பிரிவை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சர்வதேச அளவுக்கு தொழில்நுட்பத்தை உயர்த்திக் கொள்ளவும், உற்பத்தி அளவை பெருக்கிக் கொள்ளவும் முடியும்.'' என்று கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.