வால்பாறையில் தேயிலை தோட்டப் பணிகள் வழக்கம்போல் நடைபெற்றன..!

வால்பாறை: கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு இன்று முதல் தமிழகம் முழுதும் அமலுக்கு வந்தது. ஒரு சில தளர்வுகளுடன் அமலாக்கப்பட்ட இந்த ஊரடங்கு நேரத்தில், வால்பாறையில் தேயிலை தோட்டப் பணிகள் இன்று வழக்கம்போல் நடைபெற்றன.


வால்பாறை: கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு இன்று முதல் தமிழகம் முழுதும் அமலுக்கு வந்தது. ஒரு சில தளர்வுகளுடன் அமலாக்கப்பட்ட இந்த ஊரடங்கு நேரத்தில், வால்பாறையில் தேயிலை தோட்டப் பணிகள் இன்று வழக்கம்போல் நடைபெற்றன.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்படி, அத்தியாவசியத் தேவையான மளிகை, காய்கறி, பால், மருந்தகங்கள் திறக்கப்பட்டன. உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டன. பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை.



வால்பாறையில் முக்கியத் தொழிலான தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றன. இப்பணியில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். மேலும், தேயிலைத் தோட்டங்களில் மருந்து அடித்தல், உரம் போடுதல் போன்ற பணிகளும் நடைபெற்றன. தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பணியாற்றினர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...