கோவை: கோவையில் இருந்து பீகாருக்கு ரூ.4000 கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் இருந்து பீகாருக்கு ரூ.4000 கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கோவையில் வெளியூர்களில் இருந்து தங்கி வேலை பார்ப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று இரவு வரை பேருந்துகள் இயக்கப்பட்டன.தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள்போட்டி போட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற நிலையில், சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதன் பேரில், கோவை பாரதியார் சாலையில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நேற்று இரவு 11 மணி அளவில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள்அதிக பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பேருந்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது, அந்த பேருந்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் கோவையிலிருந்து பீகாருக்கு அழைத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. அவர்களிடம் தலா ரூ. 4000 வசூலிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை அறிந்த அதிகாரிகள் பேருந்திலிருந்து அனைத்து பயணிகளையும் இறங்கிவிட்டனர். அந்த ஆம்னி பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் கோவையில் இருந்து புறப்பட்ட பல ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கொரோனா தொற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,இது போன்ற பொறுப்பற்ற செயல்களால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.