கோவை: அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறி, திமுகவின் மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
கோவை: அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறி, திமுகவின் மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் முதல் கையெழுத்திட்ட உத்தரவை அடுத்து, கோவை மாவட்டத்தில் 115 வழித்தடங்களில் 369 சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 70 பேருந்துகள் என மொத்தம் 447 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த 447 பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள முடியும். இதைக் கொண்டாடும் வகையில், திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் பேருந்துகளில் பயணம் செய்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘முதல்வரின் அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பணிக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த அறிவிப்பு பயனளிக்கும். தவிர பதவியேற்ற உடன் பால் விலை குறைப்பு, நிவாரணத் தொகை வழங்கல், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்துதல், தரமான சிகிச்சை, தடையில்லா ஆக்சிஜன் பெற நடவடிக்கை என அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.'' என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் முதல் கையெழுத்திட்ட உத்தரவை அடுத்து, கோவை மாவட்டத்தில் 115 வழித்தடங்களில் 369 சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 70 பேருந்துகள் என மொத்தம் 447 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த 447 பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள முடியும். இதைக் கொண்டாடும் வகையில், திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் பேருந்துகளில் பயணம் செய்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘முதல்வரின் அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பணிக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த அறிவிப்பு பயனளிக்கும். தவிர பதவியேற்ற உடன் பால் விலை குறைப்பு, நிவாரணத் தொகை வழங்கல், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்துதல், தரமான சிகிச்சை, தடையில்லா ஆக்சிஜன் பெற நடவடிக்கை என அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.'' என்றார்.