பொள்ளாச்சி: ஆழியாறு இலங்கை அகதிகள் முகாமில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி: ஆழியாறு இலங்கை அகதிகள் முகாமில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆழியாறு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யாக்கோவுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர். கணவனை இழந்த யாக்கோவு முகாமில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. மனமுடைந்த நிலையில் காணப்பட்ட யாக்கோவு இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்து ஆழியார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாக்கோவு உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆழியாறு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யாக்கோவுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர். கணவனை இழந்த யாக்கோவு முகாமில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. மனமுடைந்த நிலையில் காணப்பட்ட யாக்கோவு இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்து ஆழியார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாக்கோவு உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.