ஆடி காரில் வந்து ஆடுகள் திருட்டு... அதிர்ச்சியில் உறைந்த ஆடுகளின் உரிமையாளர்..!

கோவை: கோவையில் ஆடி சொகுசு காரில் வந்து நூதன முறையில் ஆடுகளைத் திருடுவதை வழக்கமாகக் கொண்ட வாலிபர்களை கையும் களவுமாகப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.


கோவை: கோவையில் ஆடி சொகுசு காரில் வந்து நூதன முறையில் ஆடுகளைத் திருடுவதை வழக்கமாகக் கொண்ட வாலிபர்களை கையும் களவுமாகப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.

கோவை சுந்தராபுரத்தை அடுத்த மாச்சம் பாளையத்தைச் சேர்ந்தவர் அமிர்தம் வயது 50, இவர் தனது ஆட்டுக் கொட்டகையில் எட்டு ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு கொட்டகையில் அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து ஆடுகள் சத்தம் போடுவதைக் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது இரண்டு வாலிபர்கள் ஆடி சொகுசு காரில் ஆடுகளைத் திருடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அமிர்தம் சத்தம் போட்டார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த வாலிபர்களைக் பிடிக்க முயற்சி செய்தனர்.

அதில் ஒரு வாலிபரை மட்டும் கையும் களவுமாக மடக்கிப்பிடித்து குனியமுத்துர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தடாகம் ரோடு டி.வி.எஸ் நகரைச் சேர்ந்த தீபக் வயது 24 என்பதும் தப்பி ஓடியது அவரது நண்பர் ஈஸ்வரன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த வாலிபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...