குன்னூர்: குன்னூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற திமுக எம் எல் ஏ கா.ராமசந்திரன் வனத்துறை அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார்
குன்னூர்: குன்னூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற திமுக எம் எல் ஏ கா.ராமசந்திரன் வனத்துறை அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார்
ராமசந்திரன் கடந்த 09-08-1951 ம் ஆண்டு குன்னூர் அருகில் உள்ள இளித்துரை கிராமத்தில் பிறந்தவர். 70 வயதாகும் இவர் நீலகிரி மாவட்டத்தின் பூர்வகுடிகளான படுகர் இனத்தைசேர்ந்தவர்.
2006 ஆம்ஆண்டுநடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் கூடலூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் (அதிமுக) அ.மில்லரைவிட 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக அமைச்சரவையில் கதர் வாரிய துறை அமைச்சரானார்.
இவர் தேயிலை தொழிற்சாலை மற்றும் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது மனைவி பேபி அம்மாள், மகன் மதுசூதனன் மற்றும் வசந்தி என்ற மகளும் உள்ளனர். மகன் தந்தையின் தேயிலை தொழிற்சாலையை கவனித்துவருகிறார்.
பியூசி வரை படித்துள்ள இவர் 1971 ஆம் ஆண்டு திமுக கிளைச்செயலாளராக இளித்துரை பகுதிக்கு நியமிக்கப்பட்டார். அதன் பின் வட்டப் பிரதிநிதி, ஒன்றிய செயலாளர், செயற்குழு உறுப்பினர், நிலவள வங்கி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், மாவட்டப் பிரதிநிதி, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
தற்போது திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளராகவும் குன்னூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளார். இவர் தற்போது மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நாளை சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறார். கா.ராமசந்திரன் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்பது நீலகிரி மாவட்ட மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.
ராமசந்திரன் கடந்த 09-08-1951 ம் ஆண்டு குன்னூர் அருகில் உள்ள இளித்துரை கிராமத்தில் பிறந்தவர். 70 வயதாகும் இவர் நீலகிரி மாவட்டத்தின் பூர்வகுடிகளான படுகர் இனத்தைசேர்ந்தவர்.
2006 ஆம்ஆண்டுநடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் கூடலூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் (அதிமுக) அ.மில்லரைவிட 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக அமைச்சரவையில் கதர் வாரிய துறை அமைச்சரானார்.
இவர் தேயிலை தொழிற்சாலை மற்றும் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது மனைவி பேபி அம்மாள், மகன் மதுசூதனன் மற்றும் வசந்தி என்ற மகளும் உள்ளனர். மகன் தந்தையின் தேயிலை தொழிற்சாலையை கவனித்துவருகிறார்.
பியூசி வரை படித்துள்ள இவர் 1971 ஆம் ஆண்டு திமுக கிளைச்செயலாளராக இளித்துரை பகுதிக்கு நியமிக்கப்பட்டார். அதன் பின் வட்டப் பிரதிநிதி, ஒன்றிய செயலாளர், செயற்குழு உறுப்பினர், நிலவள வங்கி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், மாவட்டப் பிரதிநிதி, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
தற்போது திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளராகவும் குன்னூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளார். இவர் தற்போது மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நாளை சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறார். கா.ராமசந்திரன் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்பது நீலகிரி மாவட்ட மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.