உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி மூன்றாம் மண்டல பாசன இறுதி சுற்றுக்கு தண்ணீர் திறப்பு!

உடுமலை: உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி மூன்றாம் மண்டல பாசன இறுதி சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


உடுமலை: உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி மூன்றாம் மண்டல பாசன இறுதி சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் மூலம் பிஏபி பாசனத் திட்டத்தின் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுகின்றன.



உடுமலை நகரம், உடுமலை மற்றும் குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களின் குடிநீர் திட்ட ஆதாரமாகவும் இது உள்ளது. பிஏபி மூன்றாம் மண்டல பாசனத்திலுள்ள, 94,362 ஏக்கர் நிலங்களுக்கு, ஜனவரி 11ம் தேதி முதல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஐந்து சுற்றுக்களில், 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது. நான்கு சுற்றுகளில் நீர் வழங்கப்பட்டு, கடந்த மாதம் 26ம் தேதி, தண்ணீர் நிறுத்தப்பட்டது. திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து, காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு சேகரிக்கப்பட்டு வந்தது.



அணையின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில், மூன்றாம் மண்டல பாசன நிலங்களுக்கு இறுதி சுற்று தண்ணீர் இன்று முதல் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், “இறுதி சுற்றுக்கு 21 நாட்கள் தண்ணீர் வழங்கப்பட்டு பாசன காலம் நிறைவு செய்யப்படும்,” என்று தெரிவித்தனர். திருமூர்த்தி அணையில் தற்போது, மொத்தமுள்ள 60 அடியில் 48.98 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 820 கன அடியாகவும் உள்ளது.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...