பொள்ளாச்சி: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டம்.
பொள்ளாச்சி: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டம்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரு தரப்பினரும் இடையே ஏற்பட்ட மோதலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர பாஜக சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் மணிகண்ட குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட தலைவர் வசந்த ராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கு வங்கத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரு தரப்பினரும் இடையே ஏற்பட்ட மோதலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர பாஜக சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் மணிகண்ட குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட தலைவர் வசந்த ராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கு வங்கத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.