பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தை பொள்ளாச்சி மதுவிலக்கு போலீஸார் அழித்தனர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தை பொள்ளாச்சி மதுவிலக்கு போலீஸார் அழித்தனர். அத்துடன், சிறப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மதுவிலக்கு போலீஸார் தெரிவித்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தை பொள்ளாச்சி மதுவிலக்கு போலீஸார் அழித்தனர். அத்துடன், சிறப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மதுவிலக்கு போலீஸார் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட எரிசாராயம், கள்ளச்சாராயம், போலி மது தயாரிப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க துறை போலீஸார் பல்வேறு ரோந்து பணிகளை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 2019 ஆம் ஆண்டு பேரூர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராயங்களை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்தனர்.



இந்தநிலையில், அரசு உத்தரவின்படி பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 9798.600 லிட்டர் எரிசாராயங்களை, இன்று மாவட்ட கலால் துறை அதிகாரி சிவகுமார், பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 தலைமை எழுத்தர் கௌரி, மற்றும் வருவாய்த் துறை ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில், தீயணைப்புத்துறை அதிகாரிகள் பாதுகாப்போடும், பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத ஓடை புறம்போக்கு பகுதிக்கு கொண்டு சென்று மதுவை போலீஸ்ர் தீ வைத்து அழித்தனர்.



ஊரடங்கு காலங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது, மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக சிறப்பு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுவிலக்கு போலீஸார் தெரிவித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...