பொள்ளாச்சி: ஊரடங்கால் வாழை இலை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பொள்ளாச்சியில் வாழை இலை வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
பொள்ளாச்சி: ஊரடங்கால் வாழை இலை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பொள்ளாச்சியில் வாழை இலை வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடியை விவசாயிகள் அதிக அளவில் செய்து வருகின்றனர். வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து வாழை இலைகளை வாங்கி, 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் கோயில் விழாக்கள் போன்ற காலங்களில் வாழை இலையின் விற்பனை சூடுபிடித்து காணப்படும். ஆனால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுப நிகழ்ச்சிகளும், கோயில் விழாக்கள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், வாழை இலை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வரும் எங்களுக்கு இந்த ஆண்டும் வியாபாரம் பாதித்து உள்ளதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வாழை இலை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடியை விவசாயிகள் அதிக அளவில் செய்து வருகின்றனர். வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து வாழை இலைகளை வாங்கி, 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் கோயில் விழாக்கள் போன்ற காலங்களில் வாழை இலையின் விற்பனை சூடுபிடித்து காணப்படும். ஆனால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுப நிகழ்ச்சிகளும், கோயில் விழாக்கள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், வாழை இலை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வரும் எங்களுக்கு இந்த ஆண்டும் வியாபாரம் பாதித்து உள்ளதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வாழை இலை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.