கோவை: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பொறுப்பிலிருந்து விஷ்ணு பிரபு விலகுவதாக தெரிவித்துள்ளார்.
கோவை: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பொறுப்பிலிருந்து விஷ்ணு பிரபு விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு விஷ்ணு பிரபு அனுப்பியுள்ள கடிதத்தில், எனக்கு அரசியல் முகவரி தந்த ஜெயலலிதாவை வணங்கி இந்த கடிதத்தை சமர்பிக்கின்றேன்.

அதிமுக எந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்டதோ அது ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு திசை மாறி சென்று விட்டது. இன்று மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் அதிமுக சென்று விட்டது. இளைஞர்களுக்கு எந்தவித வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை.
மக்கள் பணியாற்றுவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 2021 தேர்தலில் ஆட்சியை இழந்த பிறகும் அவர்கள் தவறுகளை சரி செய்வதாக தெரியவில்லை. ஜெயலலிதா அவர்கள் எனக்கு எந்தவித சிபாரிசுமின்றி 2010ம் ஆண்டு கொடுத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பொறுப்பில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகின்றேன்,” என்று கூறியுள்ளார்.