சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்
தமிழ்நாட்டில் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக தனி ஆளாக நின்று போராடிய சமூக ஆர்வலர், டிராபிக் ராமசாமி.(86) இன்று உடல்நிலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார்.
நூற்றுக்கணக்கான பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில்தொடர்ந்து, அதன் மூலம் பல்வேறு சமுதாய பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட பெருமையை பெற்றவர்.
சென்னையில் விதிமீறிய கட்டடங்கள், கட்டுப்பாடில்லாமல் சுற்றிய மீன்பாடி வாகனங்கள், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, ஹெல்மெட் விவகாரம், அரசியல் கட்சிகளின் பேனர் கலாசாரம் என டிராஃபிக் ராமசாமி கையில் எடுத்த வழக்குகளில் எண்ணிக்கை மட்டும் ஐநூறை தாண்டும்.
அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில்தொடர்ந்து, அதன் மூலம் பல்வேறு சமுதாய பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட பெருமையை பெற்றவர்.
சென்னையில் விதிமீறிய கட்டடங்கள், கட்டுப்பாடில்லாமல் சுற்றிய மீன்பாடி வாகனங்கள், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, ஹெல்மெட் விவகாரம், அரசியல் கட்சிகளின் பேனர் கலாசாரம் என டிராஃபிக் ராமசாமி கையில் எடுத்த வழக்குகளில் எண்ணிக்கை மட்டும் ஐநூறை தாண்டும்.
அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.