கோவை: முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை பேரூர் பேராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவை: முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை பேரூர் பேராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
“எல்லாம்வல்ல சுயிலைநாதர் கருணையினாலும் அருள்மிகு அம்பலவாணப்பெருமான் இன்னருளாலும் அருள்திரு சாந்தலிங்கப்பெருமான். தண்ணருளாலும் இருபத்துநான்காம் குருமகாசந்நிதானங்கள் கயிலைக்குருமணி அவர்களின் குருவருளாலும் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள உங்களுக்கு உளங்களிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தாங்கள் துணை முதல்வராக இருந்தபோது தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் நாமும். வந்து உங்களை வாழ்த்திய போது இருவரும், ‘விரைவில் நீங்கள் முதல்வர் பதவிக்கு. வர வேண்டும்’ என்று சொன்னோம். அந்த அடிப்படையில் திருவருள் தற்போது தங்களை முதல்வர் பதவியிலே அமர்த்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
எல்லாரோடும் இனிமையாகப் பழகுகின்ற பண்பு, எளிமை, உள்ளத்திலே ஊக்கமும் உறுதியும் ஆகிய நற்பண்புகளைக் கொண்டிருக்கும் தாங்கள். தற்போது தமிழகம் எதிர்கொண்டுள்ள இந்தத் கொரோனா தொற்று சூழலைச் செம்மையான முறையில் கையாண்டு, தொற்றை முற்றிலும் நீக்கித் தொடர்ந்து தமிழகத்தை ஒரு நல்லாட்சி மிக்க மாநிலமாசு உருவாக்க எல்லாம் வல்ல இறையருளை வேண்டிக்கொள்கின்றோம்.” இவ்வாறு சாந்தலிங்க மருதாசல அடிகள்தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
“எல்லாம்வல்ல சுயிலைநாதர் கருணையினாலும் அருள்மிகு அம்பலவாணப்பெருமான் இன்னருளாலும் அருள்திரு சாந்தலிங்கப்பெருமான். தண்ணருளாலும் இருபத்துநான்காம் குருமகாசந்நிதானங்கள் கயிலைக்குருமணி அவர்களின் குருவருளாலும் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள உங்களுக்கு உளங்களிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தாங்கள் துணை முதல்வராக இருந்தபோது தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் நாமும். வந்து உங்களை வாழ்த்திய போது இருவரும், ‘விரைவில் நீங்கள் முதல்வர் பதவிக்கு. வர வேண்டும்’ என்று சொன்னோம். அந்த அடிப்படையில் திருவருள் தற்போது தங்களை முதல்வர் பதவியிலே அமர்த்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
எல்லாரோடும் இனிமையாகப் பழகுகின்ற பண்பு, எளிமை, உள்ளத்திலே ஊக்கமும் உறுதியும் ஆகிய நற்பண்புகளைக் கொண்டிருக்கும் தாங்கள். தற்போது தமிழகம் எதிர்கொண்டுள்ள இந்தத் கொரோனா தொற்று சூழலைச் செம்மையான முறையில் கையாண்டு, தொற்றை முற்றிலும் நீக்கித் தொடர்ந்து தமிழகத்தை ஒரு நல்லாட்சி மிக்க மாநிலமாசு உருவாக்க எல்லாம் வல்ல இறையருளை வேண்டிக்கொள்கின்றோம்.” இவ்வாறு சாந்தலிங்க மருதாசல அடிகள்தெரிவித்துள்ளார்.