கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ‘‘கொரோனா இரண்டாவது அலை மிக அதிகமாக பரவி வரும் சூழலில் தேவைப்பட கூடிய அளவு ஆக்சிஜன் தடுப்பூசி தொடர்பாக இந்த தொகுதியில் உள்ள அரசு தனியார் மருத்துவமனைகளின் உடனடி தேவை என்ன என்பதை பற்றியும் மரியாதை நிமித்தமாகவும் ஆட்சியரை சந்தித்தேன். ஒரு சில தேவைகளை அவர் என்னிடம் கூறியுள்ளார். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருப்பதாகக் கூறியதையடுத்து இது சம்பந்தமாக மத்திய அமைச்சரிடம் பேச உள்ளேன். கொரோனா உதவிகள் பெறுவதற்கு மக்கள் சிரமப்படுவதால், படுக்கை வசதிகள் குறித்து தெரிந்துகொள்ள ஒரு உதவி மையத்தை ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். ஆட்சியர் அதையும் நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
சென்னையில் அம்மா உணவும் தாக்கப்பட்ட சம்பவம் போன்று திமுக பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர்கள், இதை மனதில் வைத்துக் கொண்டு தங்களுடைய கட்சித் தொண்டர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும், நடவடிக்கை எடுத்தால் நல்லது. இதை அரசியல் ரீதியாக முன்னெடுக்க வேண்டும். அதை ஆரமத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் அப்போதுதான் அரசுக்கும் மக்களுக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது.
உத்தரபிரதேச முதல்வர் ஆதி யோகித்யநாத் கோவை வந்தபோது ஏற்பட்ட சம்பவத்தில் யார் உள்ளார்கள்? கல்லெறிந்து வீசிய நபர் யார்? அந்த நபரைக் குறித்து விசாரிக்க புகார் கொடுத்தேன். ஆனால், இன்று வரைக்கும் நடவடிக்கை இல்லை. பதற்றத்தை உருவாக்குவதற்காக சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளனர்'' எனவும் தெரிவித்தார்.