வால்பாறை: வால்பாறை வனப்பகுதியில் இருந்து சாலையில் வலம் வரும் கடமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாக்க வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வால்பாறை: வால்பாறை வனப்பகுதியில் இருந்து சாலையில் வலம் வரும் கடமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாக்க வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை, புலிகள் காப்பகமாக உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, கடமான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன, இந்தநிலையில், வால்பாறையை அடுத்த புதுத் தோட்டம் பகுதியில் தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பொள்ளாச்சி சாலையில் கடமான் ஒன்று, வனப்பகுதியில் இருந்து வழி தவறி சாலையில் வந்து செல்வதால், சாலையில் செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்களில் அடிபட்டு விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.

மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுப்பதால் மிரண்டு அங்குமிங்கும் ஓடி வாகனத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை வனத்துறையினர் கண்டுபிடித்து அபராதம் விதித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை, புலிகள் காப்பகமாக உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, கடமான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன, இந்தநிலையில், வால்பாறையை அடுத்த புதுத் தோட்டம் பகுதியில் தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பொள்ளாச்சி சாலையில் கடமான் ஒன்று, வனப்பகுதியில் இருந்து வழி தவறி சாலையில் வந்து செல்வதால், சாலையில் செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்களில் அடிபட்டு விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.
மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுப்பதால் மிரண்டு அங்குமிங்கும் ஓடி வாகனத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை வனத்துறையினர் கண்டுபிடித்து அபராதம் விதித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.