வால்பாறையில் உள்ள படகு இல்லத்தில் துர்நாற்றம் வீசும் தண்ணீர்... நோய்த்தொற்று ஏற்படும் என்று அச்சப்படும் மக்கள்..!

வால்பாறை: வால்பாறையில் படகு இல்லம் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால், படகு இல்லத்தில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. இதனையடுத்து நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.


வால்பாறை: வால்பாறையில் படகு இல்லம் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால், படகு இல்லத்தில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. இதனையடுத்து நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நீண்டநாள் கோரிக்கையான படகு இல்லம் அமைக்க, கடந்த ஆண்டு வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 4.2 ஏக்கர் இடத்தில் சுமார் 3.47 கோடி மதிப்பில் படகு இல்லம் அமைக்கும் பணி நடைபெற்றது. படகு இல்லம் அருகில் கடைகள் கட்டி வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைக்கப்படும் என்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

படகு இல்லம் பணி முழுமையாக நிறைவு அடையாமல் தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக திறப்பு விழா கொண்டாடப்பட்டது.



இதில் தற்போது படகு இல்லத்தில் பணிகள் மந்தமாக உள்ளநிலையில், படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு செய்யாமலும் குப்பைகள் நிறைந்து குப்பைத் தொட்டி போல் உள்ளது. இதனால், தண்ணீர் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.



மேலும், படகு இல்லத்தை சுற்றியுள்ள நடைபாதைகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணி நிறைவடையாமல் உள்ளதால், மக்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவிக்கின்றனர். வால்பாறையில் மே மாதம் இறுதியில் கோடை விழா நடைபெறும் நிலையில் படகு இல்லத்தின் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...